“ சிதறிக்கிடந்த சில்லரைகள் “
சிறுகதை_ஜிடி ரமேஷ்குமார்
சன நெரிசல் நிறைந்தச் சென்னை மாநகரில்
முக்கிய விதியின் பாலமுருகன் நடந்துச்
சென்றுக் கொண்டிருந்தான் .
சவரம் செய்யாத முகத்துடன் இன்னும்
சற்றுநேரத்தில் அறுந்துப் போகத் தயாராகக் காத்திருக்கும் செருப்புடன் உச்சி வெயில் வருத்தெடுக்க நா
வரட்சியோடு நடந்துக்
கொண்டிருந்தான் .
அவன் நடந்துச் செல்லும் போதேச் சாலையோரத்
தேனிர் கடையில் உணவருந்திக் கொண்டிருப்போரை பார்க்கும் போது தான், அவனுக்கு இதுவரைச் சாப்பிடாமலே இருக்கும்
ஞாபகம் வர வயிறு பசிக்க
மேல் சட்டை பையில் கைவிட்டுத் துலாவி பார்ததான்
ஒரு ருபாய் ஜம்பதுக் காசு மட்டுமே மிச்சமிருந்ததுத் தெரிந்தது. ஒரு தேனீர் அருந்தக்
கூட ஆரு ருபாய் வேண்டுமே என நடந்து கொண்டிருப்பவன், சாலையோரகுப்பைத் தொட்டியில் கொட்டப்பட்ட
மிச்சமுணவுகளை ஒரு வயதாணவரும்
இரண்டு நாய்களும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதுத் தெறிந்தது அதை பார்த்தது பார்க்காததும் போல யோசனை நடந்துக் கொண்டிருந்தான் இனியும் தாமாதிக்கமால்
சொந்த ஊருக்கு சென்று விடுப்போம் ,ஏதோ ஒரு வேலையினை பார்த்துக் கொண்டு பிழைத்துக்
கொள்ளலாம் என்கிற எண்ணம் மேலோங்கியது , நேர்குத்து பார்வையில் நடந்துக் கொண்டிருந்தவனின்
காலில் ஏதோ எத்தப்பட்டுக் கலகலவென சத்தம் எடுப்பியது ,குனிந்து பார்த்தான் அவன் கால் அருகில் ஒரு ருபாய்
மற்றும் ஜம்பது காசுகள் கிடந்தன .அதை எடுத்து எண்ணிப் பார்த்தான் ஏழு ருபாய்
ஜம்பது காசு இருந்தது யாருதா இருக்கும் பாவம் ரோட்டுல போட்டுட்டு போயிட்டாங்களே என யோசித்தவனுக்கு மீண்டும் வயிறு பசிப்பது ஞாபகம்வந்தது. சில்லரைகளை
கையில் எடுத்துக்கொண்டு ந்டக்கத் தொடங்கினான் .சாலையின் எதிர்திரையில் ஒரு
தேனிர்க் கடை தென்பட்டது .சரி இந்த சில்லரைகள்
நமக்கு கடவுளா பார்த்துக் கொடுத்தது என தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டு ,ஒரு
தேநீரும் ,வடையும் வாங்கினான் சற்று யோசித்தவன் ஏழுருபாய் ஜம்பது காசும் தனனிடம்
இருக்கும் ஏழுருபாய் ஜம்பதுக் காசும் சேர்த்தால் ஒன்பது ருபாய் தான் வருகிறது ,
”வடை
வேணாம்ண்ணேன்’’
என திருப்பி வைத்துவிட்டு .தேநீரை மட்டும் அருத்தினான் ,அதைக் குடித்து
முடிக்கும் முன்னே ,ஒரு வயதான அம்மா தேனீர் குடித்துவிட்டு .தன் புடவை
முந்தானியினை முன்னும் பின்னும் இழுத்துப் பார்த்து
“இங்கதான் முடிஞ்சு வச்சேன் எங்கப் போச்சு “
எனத் தேடிக் கொண்டிடுயிந்தாள்
பாலமுருகனுக்குஅந்த வயதான அம்மாத் தேடுவது நாம் எடுத்துச் சில்லரைதானா ஜய்யயோ என்ன செய்வது நாம் வேறு செலவழித்து விட்டோமே ,இதைச்
சொன்னாலும் திருப்பிக் கொடுக்க நம்மிடம் பணம் இல்லை என்னச் செய்யலாம், இருந்தும் மணம்
பொருக்காமல் கேட்டான் .”என்னப் பாட்டி தேடுறீங்க “
“ஒண்ணுமில்லப்பாச் சில்லர
முடிஞ்சினுச்சுருந்தேன் டீ வேறக் குடிச்சிட்டேன் இப்ப பாக்குறேன் காணாம் “
“எவ்வளவுப் பாட்டி வச்சிருந்திங்க “
“ஏழு ருபா இருக்கும்ப்பா “
அந்த சில்லரை அந்த வயதான அம்மாவுடையது தான்
என தனக்குள் நீருபனம் செய்தவன், செய்வதறுயாமல் திகைத்து அவனது மேல் சட்டைப் பை
,பேண்ட் பை எல்லாத்திலும் தேடினான் ..
மிச்சமிருந்த மூனுருபாய் தவிர வேறொன்றுமில்லை என்ன செய்யலாம் ,இந்தப் பாட்டி
வேறப் பாவம் ஏதாவது செய்யனுமே என்கிறத் தவிப்பும் அவனின் பணத்தைச் செலவழித்து
விட்டக் குற்ற உணர்வும் போட்டுடைத்தது.தீடீரென யோசனை வந்தவனாகப் பேன்ட்டில் உள்ள
அவனதுப் பணம் வைக்கும் பர்சை எடுத்துத் துலாவினான் .முகவரி அட்டைகளும் ,அவ்வப்போதுத்
தென்பட்டது .அதில் உள்ள ஒவ்வொறு இருக்காக விரல் விட்டுப் பிரித்துச் சோதித்தான்
.அவன் அம்மா அவனுக்காகச் சென்னைப்புறப்படும் போது விபூதி பூமி விட்டுக் கையில்
திணித்து விட்ட 10ருபாய் அம்மா கொடுத்தது எனக் குறிப்பெழுதி வைத்திருந்தப் பணம்
தென்பட்டது .அதை அவசரமாக எடுத்தவன் “பாட்டி இந்தாங்க இதவச்சுக்குங்க “வேண்டாம்ப்பா”
“இல்ல பாட்டி நீங்கவச்சுக்குங்க “
எனக் கட்டாய படுத்தியவன் அந்தச் சில்லரைகளை நான் தான் எடுத்தேன் என சொல்லவில்லை
.
வேண்டாம்ப்பா நான் அதோ அந்த ப்ளடல தான் வேலப் பாக்குறேன் இது என்க்குத்
தெறிஞ்சக் கடைதான் என்ன ஒண்ணும்
சொல்லமாட்டங்க நீ போப்பா, நான் அப்புறமாகக் கொடுத்துக்குறேன், என்றாள் அவள் சொல்லை ஏற்காமல் கடைகாரிடம் 10ருபாயை நீட்டினாள் . அதை
வாங்கிப் பார்த்தவர்
“உங்க அம்மா கொடுத்த பணமா?இதுல அம்மாக் கொடுத்ததுன்னுப் போட்டுருக்கே “
“ஆமான்னேன்”வேணாம் நீயே வச்சுக்கப்பா“அவனாயேப் பார்த்தான்”
“எனக்கு அம்மாவும் இல்ல என்கிட்டா அம்மா கொடுத்தப் பணமும் இல்ல “ .....
நன்றிப் பார்வையுடன்
மீண்டும்